இலங்கை அகதி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு...
பெரம்பலூரில் இலங்கை வாழ் அகதியான சதீஷ்குமார் என்பவர் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தி வந்த, போக்குவரத்து காவல்துறையினர், கடலை வியாபாரம் செய்து வந்த சதீஷ்குமாரிடம் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது, காவல்துறையினர் தொல்லை குடுப்பதாக கூறி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் -பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story