தாமிரபரணி புஷ்கர வழக்கு - அக்.8ம் தேதி தீர்ப்பு...

தாமிரபரணி புஷ்கர விழா தொடர்பான வழக்கின் தீர்ப்பு 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி புஷ்கர வழக்கு - அக்.8ம் தேதி தீர்ப்பு...
x
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் அக்டோபர் 12 முதல் 23ம் தேதி வரை புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது.  இந்நிலையில் நெல்லை  தைப்பூசப் படித்துறை, குறுக்குத் துறை ஆகிய இடங்களில் நீராட நெல்லை ஆட்சியர் அனுமதி மறுத்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், புலவர் மகாதேவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி மகாதேவன் முன்வு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் மகாராஜன், 'பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும்' அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்