சென்னை கோட்டையை முற்றுகையிட முயன்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
சென்னை கோட்டையை முற்றுகையிட முயன்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 3,000 பேர் கைது
x
7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனே வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பல்லவன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில், தொமுச -  சி.ஐ.டி.யூ, - உள்ளிட்ட 10 தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோட்டையை முற்றுகையிட முயன்ற தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர். சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 

அக். 8 - ல் போராட்ட அறிவிப்பு வெளியிட முடிவு

இதனிடையே, போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், வருகிற 8 ம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளனர். கோட்டை முற்றுகை போராட்டத்திற்குப்பின் கூடிய போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு, தொ.மு.ச உள்பட 10 தொழிற்சங்க தலைவ ர்கள், ஒப்புதல் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்