கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் - 20 வீடுகள் சேதம்...

அருப்புக்கோட்டை அருகே எம் . ரெட்டியபட்டி அருகே தொப்பலாகரை என்ற கிராமத்தில், சாமி கும்பிடுவதில், இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் - 20 வீடுகள் சேதம்...
x
கற்கள் - சோடா பாட்டில்கள் வீசி எறிந்ததால், இரு தரப்பிலும் 5 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவினர், 20 வீடுகளை சேதப்படுத்தியதுடன், இரு சக்கர வாகனம் மற்றும் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து விட்டு ஓடி விட்டனர். எம். ரெட்டியபட்டி பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்