சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளம் - அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு

மதுரையில் சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவிட்டார்.
சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளம் - அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு
x
மதுரை, பொன்மேனி பிரதான சாலையில் திடீரென 30அடி அளவிற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு, அங்கு இருந்த ராட்சத குழாய்கள் முழுவதுமாக உடைந்தது. பெரும் சப்தம் கேட்டு அலறியடித்து கொண்டு வந்து பார்த்த பொதுமக்கள் பள்ளம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த திடீர் பள்ளத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட  அமைச்சர் செல்லூர் ராஜு  அதை உடனடியாக மூட உத்தரவிட்டார். புதிய சாலை அமைத்து சில வாரங்களிலயே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்