கணவன் மாயம் - கண்டுபிடித்து தர மனைவி கோரிக்கை

ராமநாதபுரம் அருகே மூன்றரை ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியரின் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
கணவன் மாயம் - கண்டுபிடித்து தர மனைவி கோரிக்கை
x
ராமநாதபுரம் அருகே மூன்றரை ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியரின் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். நொச்சி ஊரணி கிராமத்தை சேர்ந்த நிர்மலா என்பவர், மாடு காணாமல் போனதால் அதனை தனது கணவர் முத்துச்சாமி தேடி சென்றதாகவும், ஆனால் அவர் வீடு திரும்பவில்லை எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கணவரின் சகோதர்கள் தங்களை மிரட்டுவதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்குமாறும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்