வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.
வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ  அலுவலகம்
x
* ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது. 

* சில ஆண்டுகள் இயங்கிய அந்த எம்.எல்.ஏ அலுவலகம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. நூலாம்படை வைத்து, தூசி படிந்து காட்சி அளிக்கும், அந்த அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக தற்போது மாறி வருகிறது. 

* இது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவிடம் கேட்டபோது, வாஸ்து சரியில்லாததால், உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அதனால் அலுவலகத்திற்கு செல்வதில்லை என்றும் கூறியுள்ளார். 

* இதனால் தொகுதி மக்கள், தங்களது பிரச்சினை, குறைகளை எம்.எல்.ஏவிடம் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்