கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறியதாக, கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
x
ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு,  நாமக்கல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. யுவராஜ் கோகுல் ராஜை கடத்திச் சென்றதை நேரில் பார்த்தவராக கருதப்படும் ஒரே முக்கிய சாட்சி கோகுல் ராஜின் தோழி சுவாதி. வழக்கு விசாரணையின் போது, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் வீடியோவில் உள்ளது நான் இல்லை, அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு போகவில்லை அந்தக் கோயில் எங்கு உள்ளது என்று எனக்கு தெரியாது என்று சுவாதி கூறினார். இதனிடையே அரசு தரப்பின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாக  மாறியது, அரசுத் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து,   நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறியதாக கோகுல்ராஜின் தோழி சுவாதி மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர்  பிருந்தா, மனு தாக்கல் செய்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்