வீட்டு சுவர் இடுக்குகளில் இருந்த 2 பாம்புகள்

திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் குடியிருப்பில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது.
வீட்டு சுவர் இடுக்குகளில் இருந்த 2 பாம்புகள்
x
திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் குடியிருப்பில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது. தென்னம்பாளையம் செக்குகாரர் தோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அருகிலிருக்கும் புதருக்குள் இருந்து பாம்புகள் வீடுகளுக்கு புகுந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பாம்பு பிடிக்கும் நிபுணர் சிவமணி வீட்டு சுவர் இடுக்களில் இருந்த 2 பாம்புகளை 4 மணி நேரம் போராடி பிடித்தார். பின்னர் அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்