சேலத்தில் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

சேலத்தில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சேலத்தில் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
x
சேலத்தில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த மனோஜ் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் நாட்டாமங்கலம் ஊத்துக்குளிக்காடு 
பகுதியில் உள்ள குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். 2 மணி நேர தேடுதலுக்கு 
பின்னர் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்