1,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 7 பேர் கைது
கள்ளச்சாரயம் கடத்த பயன்படுத்தப்பட்டு வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கிருந்த ஆயிரம் லிட்டர் சாராயம், ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார், 7 பேரை கைது செய்தனர். கள்ளச்சாரயம் கடத்த பயன்படுத்தப்பட்டு வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Next Story