"அரசின் கொள்கைகளுக்கு மாணவர்கள் பங்களியுங்கள்" - நிர்மலா சீதாராமன்
அரசின் கொள்கைளுக்கு மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு வழா நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, 257 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதை தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், மாணவர்கள் வேலை தேடுவதிலோ, நிறுவனம் துவங்குவதிலோ மட்டுமே ஆர்வம் காட்டாமல், அரசிலும் ஒரு அங்கமாக இருக்க முன்வர வேண்டும் என்றார்.
Next Story