எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு
x
* அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

* சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, எம்ஜிஆர் பொன் மொழி தொகுப்பை வெளியிட்டு, விழா பேருரை ஆற்றுகிறார். 

* துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா. வளர்மதி ஆகியோர் முன்னிலை
வகிக்கின்றனர். 

* இந்த விழாவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் , பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். 

* விழாவில், எம்ஜிஆரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, நூற்றாண்டு நிறைவு விழா மலரும் வெளியிடப்படும். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவை யொட்டி, சென்னை - அண்ணாசாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், வாழ்த்துக்கள் தெரிவித்து, பேனர்கள் - கட் அவுட்டுகள், பதாகைகள் - கொடிகள் - தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்