ஆதித்தனார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 287 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 287 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.
* திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 41வது பட்டமளிப்பு விழா, ஆதித்தனார் நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வரவேற்றார்.
* விழாவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 287 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
Next Story