ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலக்கெடு...அக்டோபர் 24 ந்தேதியுடன் முடிகிறது...

ஆறுமுகசாமி ஆணையத்தின், காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் கால நீட்டிப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலக்கெடு...அக்டோபர் 24 ந்தேதியுடன் முடிகிறது...
x
* ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை, 103 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆணையத்தின் காலக்கெடு, நீட்டிக்கப்பட்டு அதன் அவகாசம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

* இந்நிலையில், உயர் அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, உள்ளிட்ட பலரை விசாரணை செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, மேலும் 3 மாதங்களுக்கு கால நீட்டிப்பு கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்  அதற்கான கோரிக்கை கடிதத்தை விரைவில் ஆணையம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்