அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு...

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு...
x
அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி, முருகன் உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, மனுவுக்கு 3 வாரத்தில் பதிலளிக்கும் படி, உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர், புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்