பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி.யை கைது செய்யுங்கள் - ஸ்டாலின்

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில், பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி. மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி.யை கைது செய்யுங்கள் - ஸ்டாலின்
x
* இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் பேரில், ஐ.ஜி. மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவரை காப்பாற்றி வருவதாக  கண்டனம் தெரிவித்துள்ளார்.

* முதலமைச்சரின் நடவடிக்கை ஒட்டுமொத்த பெண் இனத்தின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும்  காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் பணியிடப் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக மாறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* பாலியல் புகாருக்குள்ளான ஐ.ஜி.க்குப் பரிசு அளிப்பது போல், முதலமைச்சர், துணை முதலமைச்சர்,  அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

* அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது என்றும்,ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐ.ஜி. யை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்