மலையேற்றத்திற்கு புதிய விதிமுறைகள் - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மலையேற்றம் செல்வதற்கு புதிய விதிமுறைகள் விதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
மலையேற்றத்திற்கு புதிய விதிமுறைகள் - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். மேலும், குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதுல்யா மிஸ்ரா குழுவின் கோரிக்கை அடிப்படையில், புதிய விதிமுறைகள் வகுப்பதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்