சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
* திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழரசனை கைது செய்தனர். 

* இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தமிழரசனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் 10,000 அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து தமிழரசனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்