ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை,வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு இட பிரச்சினை தொடர்பாக, கடந்த 2011ம் ஆண்டில், ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த ஸ்டாலின், மறைந்த முதல்வர் ​ஜெயலலிதா பற்றி சில கருத்துகளை கூறினார். இதையடுத்து, ஸ்டாலின் மீது 2012ம் ஆண்டு ஜனவரியில், தமிழக அரசு சார்பாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 27ம் தேதிக்கு நீதிபதி சாந்தி ஒத்திவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்