மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
x
சென்னை வடக்கு, கிழக்கு கடற்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் துளசி லிங்கம். இவரின் மகள் ரம்யா,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.  வேலை முடிந்து வீடு திரும்பும் போது,  லோடு ஆட்டோ மோதி உயிரிழந்தார்.இந்நிலையில், தனது மகள் ரம்யாவை, திட்டமிட்டு லோடு ஆட்டோ ஏற்றி கொலை செய்திருப்பதாக சிறப்பு உதவி ஆய்வாளர் துளசிலிங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதையடுத்து ஆட்டோவை ஓட்டிவந்த ஓட்டுநர் பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்