பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம்

பணி நிரந்தரம் , ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம்
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணி நிரந்தரம் , ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்,  பகுதி நேர ஆசிரியர்கள், பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்ற கோரிக்கையை இன்னும் நிறைவேற்ற வில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.  கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாத நிலையில், ஆசிரியைகள் கடும் அவதிப்பட்டு வருவதால்,  போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்