மூட்டு வலி பிரச்சினையால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு வங்கி காவலாளி தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் வங்கி காவலாளி-யாக பணிபுரிந்து வந்த முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மூட்டு வலி பிரச்சினையால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு வங்கி காவலாளி தற்கொலை
x
* காட்டுமன்னார்கோயில் அடுத்த கீழக்கரை கிராமத்தை சேர்ந்த
வீரநாராயணன் தனியார் வங்கி ஒன்றில்  காவலாளியாக  பணியாற்றி வந்துள்ளார். 

* வீட்டில் தனியாக இருந்த போது அலுவலகத்தில் கொடுத்த துப்பாகியால் தனது தாடை பகுதியில் சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் மூளை சிதறி வீரநாராயணன் இறந்து கிடந்தார். 

* தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இதனிடையே அவரது டைரியில் மூட்டுவலி பிரச்சினை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று வீரநாராயணன் எழுதிய கடிதத்தை போலீசார் கைபற்றியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்