குடிநீர் குழாய் உடைப்பு - கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

2 மாதங்களாக தூர்வாரப்படும் குளம் : இரவு பகலாக மணல் அள்ளி செல்லும் லாரிகள்
குடிநீர் குழாய் உடைப்பு - கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொக்காளக்குடி கிராமத்தில் உள்ள குளத்தை குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் இரவு பகலாக தொடர்ந்து லாரிகளில் மண் எடுத்து செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாய் பாரம் தாங்காமல் உடைந்ததுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், குளத்தில் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து  மண் எடுப்பதை நிறுத்த கோரியும்,சாலை மற்றும் குடிநீர் குழாயை சீரமைத்து தரகோரியும் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்