மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு
x
அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அரியலூர் மாவட்டம் திருமானூர் காந்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியன், ந‌தியா தம்பதியின் 9 வயது மகன் சூர்யா ஆற்றில் குளித்த போது, மணல் குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர், சிறுவனை சடலமாக மீட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்