மகனை கருணைக் கொலை செய்ய கோரி மனு - மருத்துவக்குழு பரிசோதனை

கருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மகனை கருணைக் கொலை செய்ய  கோரி மனு - மருத்துவக்குழு பரிசோதனை
x
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமேணி - சசிகலா தம்பதி, தனது மகன் பாவேந்தனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி, சிறுவனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. இதனையடுத்து தற்போது எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். இந்த பரிசோதனை முடிவுகள் வரும் 4ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 



Next Story

மேலும் செய்திகள்