கருக்கலைப்பில் பலியான கர்ப்பிணி - செவிலியர் கைது

கருக்கலைப்புக்கு காரணமாக இருந்த செவிலியர் ஜோதிலட்சுமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கருக்கலைப்பில் பலியான கர்ப்பிணி - செவிலியர் கைது
x
* மதுரை மாவட்டம் உ​சிலம்பட்டி பகுதியை சேர்ந்த ராமுத்தாய் என்பவருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள்  உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். 7 மாதங்கள் ஆன நிலையில், நான்காவதும் பெண் குழந்தை தான் என அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறிய நிலையில், அதனை நம்பி ராமுத்தாய் கர்ப்பத்தை கலைத்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் மேற்கொண்ட கருக்கலைப்பா​ல் ராமுத்தாயின் உயிர் மட்டுமல்ல, அவரது கருப்பையில் இருந்த 7 மாத ஆண் சிசுவும் உயிரிழந்துள்ளது. 

* ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற ஏக்கத்தில் தவறான முடிவு எடுத்த ராமுத்தாய்க்கு நிகழ்ந்த சோகமான முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமுத்தா​ய் கருக்கலைப்புக்கு காரணமாக கருதப்ப செவிலியர் ஜோதிலட்சுமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே எமது செய்தியாளரிடம் பேசிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டி, மூட நம்பிக்கைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம் என்றும், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய முயல வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்