செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகை வனிதா...

சென்னையில் சொத்து பிரச்சினை தொடர்பாக நடிகை வனிதா​விடம் போலீசார் விசாரணை நடத்த வந்ததை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அவர் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகை வனிதா...
x
* சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் உள்ள நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு, படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டை படப்பிடிப்புக்கு வாடகைக்கு எடுத்த,  விஜயகுமாரின் மகள் வனிதா காலி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட விஜயகுமாரிடம், அது தமக்கு உரிய சொத்து  என கூறியதாக தெரிகிறது.  இதனால் மகள் வனிதா மீது, விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இன்று போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்தியுள்ளன​ர்.

*  இதுகுறித்து விசாரிக்க இன்று போலீசார் வந்த போது, அதனை செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நடிகை வனிதா, செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது. இ​ந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்