கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள்

திருச்சியில் கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு, நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள்
x
திருச்சியில் கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு, நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மணப்பாறையில் மருந்தகம் நடத்தி வரும் சாதிக் என்பவர் இன்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லாப் பெட்டியில் வைத்திருந்த மூன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. போலீசார் ஆய்வு செய்தபோது, கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்து விட்டு கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால்  கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்