உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மராத்தான் ஓட்டம் - விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.
உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மராத்தான் ஓட்டம் - விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுப்பு தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. 3 மற்றும் 5 கிலோமீட்டர் என 2 பிரிவாக நடந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்வேறு அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், மக்கள் என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாரத்தா​னில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்