கள்ளநோட்டுக்கள் அச்சடிப்பதாக புகார் :மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடி சோதனை

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே ஒரு வீட்டில் அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளநோட்டுக்கள் அச்சடிப்பதாக புகார் :மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடி சோதனை
x
விளப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், கள்ளநோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார், அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 7 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்களும், கணினி, ஸ்கேனிங் கருவி, மை, தாள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு அச்சடித்ததாக, கூறி, 5 பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்