வேலை வாங்கி தருவதாக கூறி தவறாக நடக்க முயற்சி - ஆத்திரத்தில் நகை,பணத்தை பறித்து சென்ற மாணவர்கள்

சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி தவறாக நடக்க முயற்சி செய்ததால், ஆத்திரத்தில் நகை,பணத்தை பறித்து சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
வேலை வாங்கி தருவதாக கூறி தவறாக நடக்க முயற்சி -  ஆத்திரத்தில் நகை,பணத்தை பறித்து சென்ற மாணவர்கள்
x
* சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் வெங்கடாசபதி,  தனது வீட்டில் இருந்த 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக
காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வெங்கடாசலபதி அடிக்கடி பேசிய செல்போன் எண் ஒன்றை கண்டுபிடித்த போலீசார், அந்த எண்ணை பயன்படுத்தியவரின் வீட்டை கண்டுபிடித்தனர். புதுச்சேரியில் இருந்த அந்த வீட்டில்  பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தங்கி இருந்துள்ளனர்.

* அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்டதாக சொல்லப்படும் நகை தங்களிடம் இருப்பதை ஒப்புக்கொண்டனர். சமூக வலைதளம் மூலம் அறிமுகமான வெங்கடாசபதி வேலைவாங்கி தருவதாக கூறி,  4 பேரையும் சென்னைக்கு வரவழைத்து, தவறாக நடக்க முயற்சி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.  இதனால் ஆத்திரம் அடைந்து, அவரது
வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்