புழல் சிறையில் அடுத்தடுத்து தொடரும் சோதனைகள்...

புழல் மத்திய சிறையில் இருந்து, 18 டிவிக்கள்,15 செல்போன்கள் மற்றும் 2 ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
புழல் சிறையில் அடுத்தடுத்து தொடரும் சோதனைகள்...
x
* புழல் மத்திய சிறையில் முக்கிய குற்றவாளிகளுக்கு சொகுசுவசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. சமீபத்தில், அதனை உறுதி செய்யும்விதமாக சில புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதுகுறித்து, ஆய்வு செய்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. புகைப்படங்கள் ஒருமாதம் முன்பாக எடுக்கப்பட்டதாகவும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். 

* அதன் தொடர்ச்சியாக இன்று சிறைத்துறை டி.ஐ.ஜி., முருகேசன் புழல் சிறையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அதன் விளைவாக, சிறையில் இருந்து, 18 தொலைக்காட்சி பெட்டிகள், 15 செல்போன்கள், 2 ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்து தொடரும் அதிரடி சோதனைகளால், புழல் சிறையில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

புழல் சிறையில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:




Next Story

மேலும் செய்திகள்