கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த கார் : இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

தர்மபுரி பகுதியில் கார் கிணற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் சடலங்கள் பலமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த கார் : இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு
x
தர்மபுரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தங்கவேலு, குடும்பத்தினருடன், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் போச்சம்பள்ளி சென்றுள்ளார். பாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நிலைதடுமாறி சாலையோர கிணற்றுக்குள் விழுந்தது.  காரில் இருந்த தங்கவேல் உள்பட பெரியவர்கள் 4 பேர் வெளியே குதித்து தப்பித்துள்ளனர். 

ஆனால் சிறுமிகள் தர்ஷினி மற்றும் வர்ஷினி காருடன் நீரில் மூழ்கியுள்ளனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போச்சம்பள்ளி தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர்
இரண்டு குழந்தைளின் சடலங்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவை, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

கிணற்றிற்குள் கார் விழுந்த சம்பவத்தில் பெரியவர்கள் உயிர் தப்பிய நிலையில், சிறுமிகள் உயிரிழந்தது  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்