போலி பத்திரம் தயாரித்து விற்பனை - சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புழக்கத்தில் இல்லாத முத்திரைதாள்களை பயன்படுத்தி போலி விற்பனை பத்திரம் தயாரித்தது குறித்த வழக்கு விசாரணையை,சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி முத்திரைத்தாள் விற்பனை குறித்து அசோக்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே போல், இறந்து போன வழக்கறிஞர் பெயரில், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாதது குறித்தும் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த 2 மனுக்களையும், விசாரித்த நீதிபதி பிரகாஷ் இரு வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களுக்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்
Next Story