முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் தீவிரம்...

திருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் தீவிரம்...
x
திருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையின் 9 மதகுகள்  கடந்த மாதம் 22ம் தேதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி, 24-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை முதல் தடுப்பணையை பலப்படுத்தும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. கூடுதலாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்பணை பலப்படுத்தப்படுகிறது. கூடுதலாக பாறாங்கற்களும் கொட்டப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்