குட்கா வழக்கு : மத்திய அரசு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை - ஆர்.எம்.வீரப்பன்
குட்கா வழக்கில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் ஆட்சி, நாட்டு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குட்கா வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
தவறு செய்தது கடைநிலை அதிகாரியாக இருந்தாலும், காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தாலும் நிச்சயமாக கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Next Story