பயணிகள் வேனில் திடீர் தீ விபத்து - பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே கொடும்பாளூர் என்ற இடத்தை கடந்தபோது திடீரென தீ பிடித்தது.
பயணிகள் வேனில் திடீர் தீ விபத்து - பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்
x
மணப்பாறை அருகே வேன் ஒன்று தீப்பிடித்தது. திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி, 13 பேருடன் சென்ற அந்த வேன், மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே கொடும்பாளூர்  என்ற இடத்தை கடந்தபோது திடீரென தீ பிடித்தது. புகை ஏற்பட்ட உடனேயே, வேனை ஓட்டுநர் நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டார். இதையடுத்து, சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அந்த வேன் எரிந்து சாம்பலானது. ஓட்டுநரின் செயலால் பயணிகள் உயிர் தப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்