நெல் கொள்முதல் : முதல்வரின் கடிதம் ஒப்படைப்பு

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை புதுடெல்லியில் நேரில் சந்தித்தார்.
நெல் கொள்முதல் : முதல்வரின் கடிதம் ஒப்படைப்பு
x
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் காலஅளவை நீட்டிப்பது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் அவர் ஒப்படைத்தார். அந்தக் கடிதத்தில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த 1ஆம் தேதி முதல் அமல்படுத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்