வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
* தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து, கடந்த சில நாட்களாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
* அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
* மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், அரசால் செயல்படுத்தப்படும் குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
* கூட்டத்தின் போது துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், சரோஜா, தலைமை செயலளர் கிரிஜா வையத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story