2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிர் இழப்பு - 40 பேர் காயம்

சேலம் அருகே இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிர் இழந்தனர்.
2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிர் இழப்பு - 40 பேர் காயம்
x
* சேலம் அருகே உள்ள மாமாங்கம் என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, சாலையில் பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் எதிர்ப்புறத்துக்கு சென்றது. 

* அப்போது, பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் சொகுசு பேருந்து மீது இந்த பேருந்து பயங்கரமாக மோதியது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில்  7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

* இதற்கிடையே, விபத்து நடந்த இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ரோகினி, வருவாய் துறை அதிகாரி சுகுமார் உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். விபத்து காரணமாக, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்