விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...
x
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர். இந்நிகழ்வின் போது, கோரிக்கைகளை காதில் வாங்காமல் வேளாண் துறை அதிகாரிகள், ஆட்சியர் முன்னிலையில் அவரவர் இருக்கையில் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். இது குறித்து வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், இனி வரும் காலங்களில் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்