வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்
ஜூலை வரை 25 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, குறைவான அளவில் மக்கள் , வருமான வரி அலுவலகத்திற்கு வந்து கணக்கை தாக்கல் செய்தனர். இதற்காக, சென்னை வருமான வரி அலுவலகத்தில் 5 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் தாக்கல் செய்து விட்டதால் கூட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், நாளை முதல் தாக்கல் செய்வோருக்கு தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேரில் வருமான வரி ரிட்டர்ன் கணக்கை தாக்கல் செய்ய வசதியாக, இன்று நள்ளிரவு 12 மணி வரை அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story