ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு கைகொடுத்த போலீஸ்..
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளிடம் கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அவர்களின் பின்னால் இருப்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினர். ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளிடம் கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story