ஆசிரியர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி...

ராசிபுரம் அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதாக தற்கொலைக்கு முயன்ற மாணவி.
ஆசிரியர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி...
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் கோமதி. இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளிக்கு கோமதி தாமதாக வந்ததால், ஆசிரியர் மோகன், ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, விஷ இலைகளை தின்றதால் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்