வைகை அணை அருகிலுள்ள கிராமத்தில் நீர் தட்டுப்பாடு...

தேனி மாவட்டம் வைகை அணை அருகிலுள்ள கிராமத்தில் நிலவும் நீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை அணை அருகிலுள்ள கிராமத்தில் நீர் தட்டுப்பாடு...
x
வைகை அணையில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதூர் கிராமத்திற்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கு சென்று மக்கள் குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என புதூர் கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்