குறிஞ்சி விழா : குவியும் சுற்றுலா பயணிகள் - குளுமையான வானிலையால் மகிழ்ச்சி

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பூத்துக்குலுங்குகிறது.
குறிஞ்சி விழா : குவியும் சுற்றுலா பயணிகள் - குளுமையான வானிலையால் மகிழ்ச்சி
x
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பூத்துக்குலுங்குகிறது. நீலக்குறிஞ்சி மலர்களின் சிறப்பு குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோடை குறிஞ்சி விழா நேற்று துவங்கியது.  குறிஞ்சி விழா மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.  குளுமையான வானிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்