பாலியல் புகார் - மாணவியிடம் 5 மணி நேரம் விசாரணை

திருவண்ணாமலையில் பாலியல் புகார் தெரிவித்த மாணவியிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பாலியல் புகார் - மாணவியிடம் 5 மணி நேரம் விசாரணை
x
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை அடுத்த வாழவச்சனூர் பகுதியில் உள்ள அரசு வேளாண் கல்லுரியில் படிக்கும் மாணவி ஒருவர், விடுதி காப்பாளர் தங்க பாண்டியன் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, முன்னிலையில் மாணவி ஆஜரானரார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாணவி, போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை எனவும், வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும், பணம் வாங்கிக் கொண்டு புகாரை திரும்பப் பெறுமாறு குற்றவாளிகள் தம்மை மிரட்டுவதாகவும்  அந்த மாணவி குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்