தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் மாறுகிறதா?

தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் மாறுகிறதா என்ற சந்தேகம் உருவாகி 24 மணி நேரத்திற்குள் பல தலைகீழ் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் மாறுகிறதா?
x
வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த  கமலாலயத்துக்கு காலையில்  ஸ்டாலின் சென்றது; கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்வார் என மாலையில் வெளியான அறிவிப்பு; துணை முதலமைச்சர் பதவியை விட்டு விலகத் தயார் என்று பன்னீர்செல்வம் இரவில் அறிவித்தது என்று, ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பரபரப்புகள் அரங்கேறின. 
இதனால், தமிழக அரசியலில், கூட்டணி மாற்றங்கள் உருவாகலாம் என்ற கருத்து, பரபரவென பற்றிக்கொண்டது.ஆனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதிதாக 3 அதிரடி திருப்பங்கள் உருவாகிவிட்டன. 

துணை முதலமைச்சர் பதவியை விட்டு விலகத் தயார் என்று பன்னீர்செல்வம் பேசியதாக முன்னாள் அமைச்சரும், இன்னாள் அமைச்சரும் சொல்ல, யார் சொன்னது என்று பதில் கேள்வி எழுப்பி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் பன்னீர்செல்வம்..இதனிடையே , சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில், பாதுகாப்பு அமைச்சர் எங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பேசி, அடுத்த பரபரப்பை பற்ற வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன். இதற்கிடையில், திமுக கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்ள மாட்டார் என கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்ததாக, மூன்றாவது பரபரப்பை கொளுத்திப் போட்டார் சுப்பிரமணியசாமி.ஒவ்வொரு கட்சித் தலைமையும் ஒவ்வொரு விதமாக முடிவெடுக்க, அந்தக் கட்சிக்கு உள்ளேயே அடுத்தகட்ட தலைவர்கள் வேறுவிதமாக விரும்ப, என தமிழக அரசியல் களம் நாளுக்குநாள் சூடேறி வருகிறது.




Next Story

மேலும் செய்திகள்