பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் - தமிழக அரசு

இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியும் விதி அமல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் - தமிழக அரசு
x
வாகனங்களில் பயணிப்போருக்கு, மோட்டார் வாகன சட்டவிதிகளை கட்டாயம் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல் துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டினர்.

இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, மோட்டார் வாகன சட்ட விதி அமல்படுத்தப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அப்போது உறுதி அளித்தார். இதுசம்பந்தமாக பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தின்பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்